சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஊர்வலம்

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மற்றும் மகளிர் லயன்ஸ் கழகம்,தர்சனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலை இணைந்து நடாத்திய விழிப்புணர்வு ஊர்வலம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உட்பட பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.