(லியோன்)
புனித மிக்கேல் கல்லூரியின் சாரணியரின்
நூற்றாண்டை சிறப்பிக்கும் சிறப்பு
சைக்கள் பவனி இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் சாரணிய நூற்றாண்டை சிறப்பிக்கும்
முகமாக புனித கல்லூரி முன்னால் ஆசிரியரும் மாவட்ட முன்னாள் சாரண
ஆணையாளருமான அ . இருதயநாதன் தலைமையில் சிறப்பு சைக்கள் பவனி மட்டக்களப்பில் நடத்தப்பட்டது
இந்நிகழ்வானது சமூகத்தையும்
சமூக சேவையினையும் ஒன்றிணைக்கும்
நோக்குடன் கல்லூரி பழையமாணவர்கள்
,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் , மற்றும் கல்லூரி சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (16 ) மாலை
மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஆயித்தியமலை வரை சென்று அங்கு இடம்பெற்ற
பயிற்சி பட்டறைகளின் பின் மீண்டும் இன்று
சனிக்கிழமை மட்டக்களப்பு நகரை வந்தடைந்தனர்
இவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா
அருகில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக
மற்றும் கல்லூரி பழையமாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , கல்லூரி சமூகத்தினர் என பலர் கலந்துகொண்டனர் .