மட்டக்களப்பு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யுத்த வீரர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யுத்த வீரர்களின் குடும்பங்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் ரணவிரு சேவை அதிகாரசபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி ஆணையாளர் நிசாந்த கமலசிறி தெரிவித்தார்.

ரணவிரு சேவை அதிகாரசபையின் கீழ் மாவட்ட ரீதியில் உள்ள ரணவீரு உறுப்பினர்களை இணைத்து புதிய ரணவிரு குழுக்கள் அமைக்கும் பணிகள் இலங்கையின் பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அமைக்கப்பட்டுவரும் நிலையில் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யுத்த வீரர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து மாவட்ட ரணவிரு சங்கம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மாவட்ட ரணவிரு சங்கம் அமைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அகில இலங்கை ரணவிரு அதிகாரசபையின் உபதவிசாளர் திருமதி விபுலாங்கனி மாலேகமுகவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன், +
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் தினேஸ் கருணாநாயக்க,கல்லடி 231படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் அனுர துணுதிலக,கடற்படை அதிகாரி கப்டன் ரஞ்சித் திசாநாயக்க உட்பட விமானப்படை,பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் உயிரிழந்த பொலிஸ் இராணுவ மற்றும் ஏனைய படைப்பிரிவுகளின் குடும்பத்தினரும் காயமடைந்த மற்றும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ரணவிரு சேவை அதிகாரசபையின் மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மாவட்ட அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் அமைக்கப்படவில்லை.

ரணவிரு சேவை அதிகாரசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.அவர்கள் இங்கு பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.

எனினும் தற்போது அமைக்கப்படும் இந்த குழு மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட யுத்த வீரர்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும் என்றார்.