(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால திட்டத்தின் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு
முன்னறிவித்தல் வழங்குவது தொடர்பான
அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தொடர்பான குழு கலந்துரையாடல்
நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
திணைக்கள பிரதி பணிப்பாளர் எஸ் .இன்பராஜன்
, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , கிழக்கு பல்கலைக்கழக புவியியல்
சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர்
கிருபாகரன் , CHA மாகான திட்ட
இணைப்பாளர் எஸ் .பி .சில்வஸ்டர் , CHA மாவட்ட உத்தியோகத்தர்
எம் .எம் . ஹகமட், CHA திட்ட உதவியாளர் ஆர் .ஜேம்ஸ் , மற்றும் தனியார் வங்கிகளின் உத்தியோகத்தர்கள் , அரச
திணைக்கள அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்