களுதாவளையில் இடம்பெற்ற தீவிபத்தில் வீடு எரிந்து நாசம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் திங்கட்கிழமை மாலை 3.45 மணியளவில் எற்பட்ட தீவிபத்தில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாக்கி சம்பவலாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

திங்கட் கிழமை (01) மாலை களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீட்டில் எரிவாயு வெடித்ததில் வீடு எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விடையமறிந்த களுவாஞ்சிகுடி பொலிசார் சுமார் 25 இற்கு மேற்பட்டோர் உடன் ஸ்த்தலத்திற்கு விரைந்து உயிர் சேதம் ஏற்பாமல் காப்பாற்றியதாக களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள முக்கிய ஆவணங்கள், தொலைக்காட்சிப்பெட்டி, குளிரூட்டி உட்பட   அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், இச்சம்வம் தொடர்பில் பொலிசார், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும், தேசத்த்தின் மதிப்பீடு தொடர்பில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், வீட்டு உரிமையாளர் 5 பிள்ளைகளின் தந்தையான செல்லையா ஜீவரத்தினம் தெரிவித்தார்.