தேசிய சேமிப்பு வங்கியினால் தரம் ஐந்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையினால் நடத்தப்பட்ட  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் தேசிய சேமிப்பு வங்கியின் மட்டக்களப்பு கிளையில் சேமிப்பு  கணக்கினை வைத்துள்ள  மாணவர்களில் 2015  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 65 மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு   பரிசில்களும் ,சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர்  எஸ் .வி . சுவேந்திரன்  தலைமையில்  மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் (24)  ஞாயிறுக்கிழமை நடைபெற்றது .


இந்த நிகழ்வில்   பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கே . பாஸ்கரன்  கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு தபால் நிலைய பிரதேச கண்காணிப்பாளர் எஸ் . ஜெகன் ,வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபர் திருமதி . ஆர் . கனகசிங்கம் மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .