ஆரையம்பதி பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஸேக நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த சங்காபிஸேக நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றது.
பூசை நிகழ்வுகளை சிவஸ்ரீ மயூரன் குருக்கள் நடாத்திவைத்தார். சைவப் புலவர் திமதி ஞானசூரியம் அவர்களின் விசேட சொற்பொழிவும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வறிய குடும்பங்களைச் சேர்ந்து 5 மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்வும் நடைபெற்;றது.

இந் நிகழ்வின்போது பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி , உதவிப் பிரதேச செயலாளர் திருமதி . பிரசாந்தன் லக்ஸன்யா, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி . இராசமணி லதாகரன், கிராம உத்தியோகத்தர் (நிருவாகம்) எஸ்.குருநாதப்பிள்ளை , பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ரூபாகரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கலென பெருந்திரலானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் அன்னதானம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.