மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு (VIDEO & PHOTOS)

  (லியோன்)

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.


ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று மாலை மட்டக்களப்பு  கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து கொடிச்சீலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி  மற்றும் பார் வீதி  ஊடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
மேளதாளங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.


பத்து நாட்கள்  நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.

இந்த ஆடி அமாவசை உற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 01 ஆம் திகதி  நடைபெறவுள்ளதுடன் 02 ஆம் திகதி தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.