அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் 08 ஆம் நாள் திருவிழா

(லியோன்)

மட்டக்களப்பு
அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின்  08 ஆம்  நாள்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது.


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்    08 ஆம்  நாள் பெருவிழா  ஆலய பிரதம குரு ஆகம கிரிஜாமணி சிவாகம கிரிஜாதத்வநிதி ஈசான சிவாச்சாரியார் சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார்   தலைமையில்   ஏலூர் குருகுல  வம்ச  மக்களால் மிக  கோலாகலமாக இன்று  சிறப்பிக்கப்பட்டது .

இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் தொடர்ந்து விசேட யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம்  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஈஸ்வரருக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன்  சுவாமி உள்வீதி  வீதியுலா சிறப்பாக நடைபெற்றது


இன்று நடைபெற்ற  08 ஆம்  நாள்  உற்சவ பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்

நாளை ஆடி அமாவசை உற்சவத்தின் தேர்த்திரு விழாவும்   02 ஆம் திகதி செவாய்கிழமை  தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.