தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை; மேற்கத்தையும் அங்கீகரிக்கவில்லை-இரா.துரைரெட்னம்

தமிழர்களின் விளையாட்டுகளுக்கு சர்வதேச அங்கீகாரங்களை மேற்கத்தையவர்கள் வழங்க முன்வரவில்லையென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தேச சங்கத்தில் பயிற்சிகளை பூர்த்திசெய்து தேசிய பயிற்றுவிப்பாளர்கள் சான்றிதழைப்பெற்றுக்கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கராத்தே சங்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தேச சங்கத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரும் தலைவருமான கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள்,சோட்டாக்கன் கராத்தே சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தேச சங்கத்தில் பயிற்சிகளை பூர்த்திசெய்து பயிற்றுவிப்பாளர்களாகவுள்ள சுமார் 30 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.