மண்முனை வடக்கு கலாசார திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் கலாசார இலக்கிய சித்திரப் போட்டிகள் இன்று கல்லடியில் இடம்பெற்றது
இடம்பெற்ற போட்டிகளில் தனிப்பாடல்கள், நாட்டார் பாடல்கள் ,கவிதை , கட்டுரை , பாடல்
நயத்தல், குழு நடனம் , கூத்து போன்ற பல பாரம்பரிய கலாசார போட்டிகள் இடம்பெற்றது .
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி வலய மட்டத்தில்
பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்படுகின்ற கலாசார இலக்கிய போட்டிகளில் சித்தியடைந்த மாணவர்கள்
பிரதேச செயலக மட்டத்திலும் அதனை
தொடர்ந்துமாகான மட்டத்திலும் இடம்பெறவுள்ள கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு
பற்றவுள்ளனர் .
இன்று மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வலய
மட்ட கலாசார இலக்கிய போட்டி நிகழ்வில் நடுவர்களாக கல்லடி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிருவாக
விரிவுரையாளர்களான செல்வி . ஜனனி , செல்வி
. லோகதர்சினி . சமுர்த்தி
உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி பயனாளிகள் , பயனாளிகளின் பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .