கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் இயக்குனராக கடந்த எட்டு வருடங்களாக கடமையாற்றிய அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி அடிகளாரின்ப ணி நிறைவு நன்றி விழா

(லியோன்)
சேவை நலன் பாராட்டு விழாவும்  கௌரவிக்கும் நிகழ்வும்  இன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரம் எகெட் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது .

.இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தின் இயக்குனராக கடந்த எட்டு வருடங்களாக கடமையாற்றிய அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி அடிகளாரின்  பணி நிறைவு நன்றி  விழாவும் , கரித்தாஸ் இலங்கை செடெக் நிறுவனத்தின் புதிய இயக்குனராக பதவியேற்கவுள்ள அருட்பணி கரிதாஸ் சாந்திகுமார் வெலிவிற்ற அடிகளாரை  வரவேற்கும் நிகழ்வும் மட்டக்களப்பு  கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா தலைமையில் 23.06.2016  இன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரம் எகெட் நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி எ.தேவதாசன் , இருதயபுரம் பங்கு தந்தை ஜெகாந்தன் , கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் , குருநாகல் , அனுராதபுரம் மறை மாவட்டங்களின் கரித்தாஸ் நிறுவன இயக்குனர்கள் , கரித்தாஸ் இலங்கை செடெக் நிருவாக செயற்திட்ட முகாமையாளர் கே . தெய்வேந்திரன் மற்றும் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் அருட்தந்தையின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஊழியர்கள் விசேட கலை  நிகழ்வுகளும்   இடம்பெற்றது .