முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலானந்தர் ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பில்

இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 124வது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு திருநீற்றுக்கேணி பூங்காவில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் ஏற்பாட்டில் ஜனனதின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம்,இராமகிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபுபிரபானந்த ஜி மகராஜ் உட்பட பாடசாலை மாணவர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாநகரசபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது விபுலானந்தரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஜனனதின நிகழ்வுகள் நடைபெற்றன.