மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் இனந்தெரியாதவர்களினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு திக்கோடையைச் சேர்ந்த லோகிசன் என்பவர் 38ம் கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு இரவு 9.30 மணிக்கு சென்று வயல் வேலைகளை முடித்து விட்டு வந்துபார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமல்போயுள்ளது.
இது தொடர்பில் மண்டூர் பொலிசில் முறைப்பாடுசெய்தநிலையில் குறித்த பகுதியில் உள்ள பற்றைக்காட்டுக்குள் மோட்டார் சைக்கிள் எரிந்துகொண்டிருப்பதாக பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.