மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம்

(லியோ)

மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு காமாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த  தேர் உற்சவம் 14.04.2016  சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் மிகப்பிரமாண்டமான ஆலயமாகவும் இலங்கையில் ஒரேயொரு காமாட்சி அம்மன் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு மைலம்பாவெளி அருள்மிகு காமாட்சிஅ ம்பாள் ஆலயத்தின் வருடாந்த  தேர் உற்சவம்  14.04.2016  வியாழக்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.


இன்று காலை விசேட கிரியைகள் நடைபெற்று அம்பாளுக்கு அபிசேம்,ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்பாளின் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
 
இந்த தேர்த்திருவிழா உற்சவத்தில்   அடியார்கள் புடை சூழ வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன்   கோலாகலமாக இடம்பெற்றது .
 
 இந்த தேர்த்திருவிழா உற்சவத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.