(லியோ)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திராய்மடு கிராமசேவை பிரிவில் மகளிர் தின விழிப்புணர்வு
நிகழ்வு இன்று இடம்பெற்றது .
“நிலையான எதிர்காலத்திற்கு
வலுவான பெண்கள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு திவிநெகும
சமூக அபிவிருத்தி திட்டத்தின் தெரிவு செய்யப்பட திராய்மடு மாதிரி கிராமத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் திராய்மடு மாதிரி கிராமத்தில் தெரிவு செய்யப்பட சிறந்த தாய்மார்களை
கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு
பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவப்
பணிப்பாளர் திருமதி . நிர்மளா தேவி கிரிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக
திவிநெகும தலைமையகமுகாமையாளர் திருமதி . கலைச்செல்வி வாமதேவன் ,மண்முனை
வடக்கு பிரதேச செயலக திவிநெகும கருத்திட்ட முகாமையாளர் செல்வி . சாமினி ,மண்முனை வடக்கு பிரதேச
செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் . தில்லைநாதன் , சமூக அபிவிருத்தி உதவியாளர் .
எஸ் . விஜெகுமார் ,இருதயபுரம் வங்கி
முகாமையாளர் திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம்
கிழக்கு வங்கி முகாமையாளர் திருமதி . குமுதினி , இருதயபுரம் கிழக்கு வலய உதவியாளர் குமணன் , இருதயபுரம் வலய
உதவியாளர் .டி .பிரபாகரன் , வாழ்வின்
எழுச்சி உத்தியோகத்தர் இ .காண்டீபன்,
கிராம சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை ,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திராய்மடு
கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,சமுர்த்தி சங்கங்களில் பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்