2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 (லியோ)

மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இல்  நடத்தப்பட்ட   2015 தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை  கௌரவிக்கும்  நிகழ்வு இன்று இடம்பெற்றது. 


மட்டக்களப்பு  மண்முனை மேற்கு வலயத்தின் பட்டிப்பளை கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த   பாடசாலை மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி  கிண்ணங்கள்   வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை     04 இன்   முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில்  இன்று  மட்டக்களப்பு  செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04கு   பிரிவின்  ஏற்பாட்டில்    2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை  கௌரவித்து  அவர்களுக்கு  மாணவர்களுக்கு வெற்றி  கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை  விற்பனை  மேற்பார்வையாளர்   வி . மகேஷ் ,  செலிங்கோ  லைப்  கிளை   உத்தியோகத்தர்  ,விற்பனை மேற்பார்வையாளர் எஸ் . நிரஞ்ஞன் ,விற்பனை ஆலோசகர்கள்
எஸ்.டனுஷ்கா,எ,கதீஸ்   மற்றும்  பாடசாலை  மாணவர்கள்  மற்றும் பெற்றர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04  இன்   பிரிவினை  விரிவுபடுத்தும் முகமாக  வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன .

இது தொடர்பான விபரங்களை  எஸ் .  0777 58 59 04  ஆகிய தொலை பேசி இலக்கத்திற்கு  தொடர்பு கொண்டு மேலதிக தகல்களை   பெற்றுக்கொள்ள முடியும் .