2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த முகவர்களுக்கான விருதினை தயா மோட்டார் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது

(லியோ)

அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட சிறந்த முகவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு தயா மோட்டார் நிறுவனம் சிறந்த முகவர் நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது .


டாட்டா மற்றும் டெமோ நிறுவன  ஏற்பாட்டில் நீர்கொழும்பில் இடம்பெற்ற  2015  ஆம் ஆண்டுக்கான சிறந்த முகவர்களுக்கான  விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு தயா மோட்டார் நிறுவனம் அகில இலங்கை ரீதியாகவும் மற்றும் மாகான ரீதியாகவும் சிறந்த முதல்தர முகவருக்கான விருதுகளையும் ,சான்றிதழ்களையும்  பெற்றுக்கொண்டுள்ளது  .

டாட்டா மற்றும் டெமோ நிறுவனத்தினால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடாத்தப்படும்  விருது வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு தயா மோட்டார் நிறுவனம் சார்பாக கலந்துகொண்ட  எ .பத்மநாதன் நிறுவனத்தின் சிறந்த முகவர்களுக்கான  முதல்தர விருதுனையும் , சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டுள்ளார் .

 இந்நிகழ்வு கடந்த  கிழமை நீர்கொழும்பில் கிரண்டிசாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .