(லியோ)
மட்டக்களப்பு
மற்றும் அம்பாறை இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தினால்,குற்றவாளிகளாகாமல்
வாழும் வழிமுறைகள் ஆராயும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நாடளாவியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது
.இந்த விழிப்புணர்வு
கருத்தரங்கானது சிறைச்சாலை இருக்கின்ற கைதிகள்
. சிறைச்சாலைகளில் இருந்து
விடுதலையானவர்கள், பாடசாலை மாணவர்கள் ,சமூக மத்தியில் மற்றும் குடும்ப சூழலில் வாழபவர்கள் விடயத்தில்
கவணம் செலுத்தி மாணவர்களின் கல்வியிலும்
சமூக மத்தியில் வாழபவர்கள் சிறைகளுக்கு
செல்வதனை தடுப்பதற்கான ஆலோசனைகளும்
வழங்கி வருகிறது .
இந்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை இலங்கை சிறைச்சாலை ஐக்கியம் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட
மட்டத்தில் நடைமுறை படுத்தி வருகின்றனர் .
இதன் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு இலங்கை சிறைச்சாலை ஐக்கியத்தின் மட்டக்களப்பு பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
கருவப்பங்கேணி விபுலானந்த
கல்லூரியில் அதிபரின் தலைமையில் கல்லூரி
பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் இலங்கை
சிறைச்சாலை ஐக்கியம் ஒன்றியத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை பிராந்திய தேசிய
இயக்குனர் ஜெயராஜ் , தலைவர் . தயாசீலன் , சிறைச்சாலை ஐக்கிய குழுவின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்
,ஆசிரியர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .