உலக தாய்மொழி தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது

(லியோ )

ஆண்டு தோறும் உலக தாய்மொழி தினமானது  பெப்பரவரி 21ஆம் திகதி  அன்று உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றது .


 ஒருவருக்கொருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.

உலகளாவிய ரீதியாக பேசப்படும் மொழிகள்  பொதுமொழி ,தாய்மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது . உலகிலுள்ள மொழிகளுள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ளவும் வருடம் தோறும் பெப்பரவரி 21ஆம் திகதி  உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

இதனை நினைவு கூறும் முகமாக உலக தாய்மொழி தின நிகழ்வுகள்  இன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது  .
உலக தாய்மொழி தினம் நிகழ்வில் தெலுங்கர்  ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல்  மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு கலாசார நிகழ்வுகள் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவக வளாகத்தில்  இன்று இடம்பெற்றது .


 இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகரை  அம்மந்தனாவெளி  களுவங்கேணி வேடர்  சமூகத்தினர்  , அளிகம்பை தெலுங்கர் சமூகத்தினர் மற்றும்  மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினர்  பங்களிப்பு செய்தனர் .

தமது தாய்மொழி தின  நிகழ்வினை நினைவு கூறும் முகமாக  தெலுங்கர்  ,பறங்கியர் ,  வேடர் சமூகங்களின்   பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது .



இந் நிகழ்வில்  கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி க .ஜெயசிங்கம் ,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர்  உமா குமாரசுவாமி , அருட்தந்தை ஜோசெப் மேரி  மற்றும் தெலுங்கர், வேடர், பறங்கியர்  ஆகிய சமூகத்தினர் , கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .