(லியோ )
மட்டக்களப்பு கூழாவடி திருவருள்மிகு ஸ்ரீ கலியுக வரத ஆதி சேடர் ஆலய
நான்காவது வருடாந்தச் சடங்கு நிறைவும் காவியம்
தாலாட்டும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது
.
மட்டக்களப்பு கூழாவடி எட்டாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள திருவருள்மிகு
ஸ்ரீ கலியுக வரத ஆதி சேடர் ஆலய நான்காவது வருடாந்தச் சடங்கு நிறைவு விசேட பூசைகள் ஆலய ஸ்தாபகர் ஆதி சேடர் அப்பா சிவா தலைமையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது
.
இடம்பெற்ற சிறப்பு பூசையினை தொடர்ந்து ஆலயத்தின் காவியம் தாலாட்டும்
பாடல்கள் அடங்கிய இரண்டாவது இறுவெட்டு வெளியீட்டும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது
.
இன்று இடம்பெற்ற ஆலய நான்காவது வருடாந்தச் சடங்கு விசேட பூசை
நிகழ்வில் பெருமளவான பக்தர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர் .