(லியோன்)
கிழக்கின் இளைஞர் முன்னணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இந்த
திட்டத்தின் கீழ் கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் திட்டமிடலுக்கு அமைவாக கோட்டைகல்லாறு பாலர் பாடசாலை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு
இணங்க கோட்டைகல்லாறு பாலர் பாடசாலையில் கோட்டைகல்லாறு இளைஞர்
முன்னணியின் கிளை உறுப்பினர்களினால் சிரமதான
பணிகள் மேற்கொள்ளப் பட்டது .
கோட்டைகல்லாறு
இளைஞர் முன்னணியின் கிளை உறுப்பினர்களினால்
மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதான பணிகள்
மூலம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பான
சுற்றுச்சூழல் மாணவர்கள் கல்வி
கற்பதற்குரிய வகையில் மாற்றப்பட்டுள்ளது .
இவ்வாறு
இப்பாடசாலை மாற்றப்பட்டமைக்கும் ,இவ்வாறான
சமூக பணிகளை மேற்கொண்டு வரும் கிழக்கின் இளைஞர் முன்னணியினருக்கும்
அதன் தலைவருக்கும் தமது நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் பாடசாலையின்
ஆசிரியர் தெரிவித்துக்கொண்டார் .