(லியோன்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக சமூக
சேவைகள் பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு
இடம்பெற்றது .
மண்முனை வடக்கு பிரதேச
செயலக சமூக சேவைகள்
பிரிவினால் நடத்தப்பட்ட மாற்றுத்திரனாளிகள் தின
நிகழ்வும் “ தடைகளே
படிகளாக ‘ எனும் மலர்
வெளியீடும் மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் வி
.தவராசா தலைமையில் பிரதேச
செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர்
திருமதி .பி .எஸ்
.எம் .சார்ள்ஸ் , கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு
உதவி பிரதேச செயலாளர்
எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி , கெமிட் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர் கே . காண்டீபன், எல் .ஒ .எச்
. பணிப்பாளர் டேவிட் , ஹென்டிக்கப் நிறுவன திட்ட முகாமையாளர் கிறிஸ்டி சந்திரகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்
இடம்பெற்ற
நிகழ்வில் போது மாற்றுத்திரனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு தொகையும் மாணவர்களுக்கான
கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில்
தரிசனம், வாழ்வோசை,ஓசாணம்,
மென்கப், புகலிடம் ஆகிய
நிறுவன மாணவர்களும் ,ஆசிரியர்களும் கலந்துகொண்டனர் .