திக்கோடையில் கஞ்சா வைத்திருந்த மூவருக்கு 27 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை காந்திபுரம் பகுதியில் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தினால் தலா ஒன்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு திக்கோடை காந்திபுரம் பகுதியில் இருந்து மூவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 63 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவரும் கைதுசெய்யப்பட்டு இன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூவருக்கும் தலா 9000ரூபா தண்டப்பணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.றியாழினால் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.