பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

(திலக்ஸ்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட சடலமானது ஒரு பிள்ளை தந்தையான 26 வயதை உடைய ஜெயதீபன் என்பவர் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(19) மாலை குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.