காட்டு மரங்களை வெட்டிய ஐந்து பேர் கைது

காட்டு மரங்களை வெட்டிய ஐவர் வன இலாகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொல்லங்குளம் காட்டுப் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை மாலை வன இலாகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர்கள் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரும் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதான தகவல் தங்களுக்குக் கிடைத்ததை அடுத்து உடனடியாக சுற்றி வளைப்பு நடத்தி அவர்களைக் கைது செய்ததாக வன இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் வன இலாகா அதிகாரிகளும் சேருநுவர பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரும் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமவாசிகள் என தெரியவருகின்றது.