இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தமிழ் இளைஞர்கள் தெரிவு

மூன்றாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் மூன்று தமிழ் இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


இன்று காலை மும்முரமாக வாக்குப்பதிவுகள் நடைபெற்றதுடன் இன்று பிற்பகல் 3.00மணி தொடக்கம் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றன.

இதனடிப்படையில் கல்குடா தொகுதியில் கே.ஜெபக்குமார் 2304 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளதுடன் மட்டக்களப்பு தொகுதியில் 1564 வாக்குகளைப்பெற்று ஜெ.ஏ.பயாஸ்குமார் வெற்றுபெற்றுள்ளதுடன் பட்டிருப்பு தொகுதியில் களுதாவளையை சேர்ந்த பி.சதீஸ்குமார் 431வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மூன்றாவது பாராளுமன்ற தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.