(ஜே.எச்.இரத்தினராஜா)
மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி பவுல் சபையினர் தமது சபையின் பாதுகாலரான தூய வின்சன்ட் டி போல் நினைவு தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் பிராந்திய எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்திவரும் வினா விடைப்போட்டியானது சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்போட்டிகளில் இவ்வருடம் 10 பாடசாலைகள் பங்குபற்றின. நடைபெற்ற போட்டிகளில் ஆண்டு 9,10,11 பிரிவில் முதலாவது இடத்தினை புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையும், இரண்டாவது இடத்தினை ஜோசப்வாஸ் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.
ஆண்டு 12,13 பிரிவில் புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை முதலாவது இடத்தினையும், புனித மிக்கேல் தேசிய கல்லூரி 2வது இடத்தினையும் பெற்றன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்; சபையானது தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டது.
இவர்களுக்கான பரிசுகள் மார்கழி மாதம் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி பவுல் சபையினர் தமது சபையின் பாதுகாலரான தூய வின்சன்ட் டி போல் நினைவு தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் பிராந்திய எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்திவரும் வினா விடைப்போட்டியானது சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்போட்டிகளில் இவ்வருடம் 10 பாடசாலைகள் பங்குபற்றின. நடைபெற்ற போட்டிகளில் ஆண்டு 9,10,11 பிரிவில் முதலாவது இடத்தினை புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையும், இரண்டாவது இடத்தினை ஜோசப்வாஸ் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.
ஆண்டு 12,13 பிரிவில் புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை முதலாவது இடத்தினையும், புனித மிக்கேல் தேசிய கல்லூரி 2வது இடத்தினையும் பெற்றன.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்; சபையானது தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டது.
இவர்களுக்கான பரிசுகள் மார்கழி மாதம் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.