ரயிலில் மோதுண்டு முதியவர் பலி –கருவப்பங்கேணியில் சம்பவம்

(லியோன்)

கொழும்பு- மட்டக்களப்பு கடுகதி ரயிலில், இன்று(31) அதிகாலை 5.30 மணியளவில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் பலியானவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 79 வயதுடைய மூத்ததம்பி வடிவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள கருவப்பங்கேணியால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி ரயிலில் குறித்த நபர் மோதுண்டு பலயாகியுள்ளார்.

சடலத்தினை உறவினர்களிடம் ரயில் திணைக்கள அதிகாரிகள் ஒப்படைத்தபோதிலும் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.