கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு  கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர் தின நிகழ்வு  இம்முறை ஆசிரியர்களை வலுவூட்டி நிலைபேறான சமூகத்தை கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் பாடசாலை  மாணவி செல்வி .ஜீ. டிலக் ஷியா தலைமையில் 12.10.2015 மாலை 03.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது  .
 கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது  .

இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில்  மாணவர்களினால் அதிதிகளுக்கு  மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர் .

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர்களினால்  ஆசிரியர்  கீதம் பாடப்பட்டது . அதனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது  .

விழிப்புலனற்ற  மாணவர்களை   கல்வியிலும்  சமூக மட்டத்திலும்  மற்றவர்களை போன்று    முன்னிலையில் கொண்டு செல்லும்  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக  மட்டக்களப்பு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம் . குருகுலசிங்கம் ,மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ . சுகுமாரன் , கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை  தலைவர் எம் .தயானந்தன் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள்  பாடசாலை மாணவர்கள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்