தமிழாசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிருவாகத் தெரிவு

கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை நிருவாகத் தெரிவு செவ்வாய்க்கிழமை கல்லடியில் அமைந்துள்ள அதன் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றதாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.


இந்த நிருவாகத் தெரிவின்போது பாடசாலை அதிபர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கூடவே, கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பிரச்சாரச் செயலாளர் ரீ. தவேந்திரகுமார், அதன் பொருளாளர் ரீ. பார்த்தீபன் ஆகி;யோரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் மட்டக்களப்புக்காக அமைக்கப்பட்ட அதன் முதலாவது கிளைத் தெரிவில் நிருவாகிகளும் நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தலைவர் கணபதிப்பிள்ளை பிரபாகரன் (அதிபர், பட்டிருப்பு கண்ணகி தமிழ் வித்தியாலயம்) செயலாளர் ரீ. தேவராஜா ( அதிபர், பட்டிருப்பு மகிழூர்முனை சக்தி வித்தியாலயம்) பொருளாளர் ஆர். செந்தில்நாதன் ( அதிபர், கரடியனாறு மகாவித்தியாலயம்)இவர்களோடு நிருவாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர.;
பி. கந்தசாமி (அதிபர், மகிழூர்முனை சக்தி வித்தியாலயம்)
எஸ். சச்சிதானந்தம் (அதிபர், திக்கோடை கணேசா வித்தியாலயம்)
கே. சந்திரசேகரம் (அதிபர், பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலை)
எஸ். உதயகுமார் (அதிபர், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்)
ரீ. தயாபரன் ( சிரேஷ்ட ஆசிரியர், பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலை),எஸ். முகுந்தன் ( சிரேஷ்ட ஆசிரியர், ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்)
எஸ். சிவராஜ் (சிரேஷ்ட ஆசிரியர் கோப்பாவெளி வித்தியாலயம்)
என். சதாத்தன் (வயலக் கல்வி அலுவலகம் கல்குடா)