மட்டக்களப்பில் பாடுமீன் விருது அறிமுகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்ட மட்டத்தில் புலமைப் பரிட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பிரான்ஸ் பாடுமீன் அமைப்பினால் பாடுமீன் விருது வழங்கப்படவுள்ளது.
இது இவ்வாண்டிலிருந்து தொடர்ச்சியாக வழங்கப்படுமென்று பிரான்ஸ் பாடுமீன் அமைப்பு தெரிவித்துள்ளது அத்துடன் விருது பெறும் மாணவர்களின் படம் தாங்கிய பெரிய பதாதை ஒன்றும் மட்டக்களப்பு நுழைவாயிலில் நிரந்தரமாக வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

இவ்வாண்டிற்கான பாடுமீன் விருது நிகழ்வு எதிர்வரும்  30/10/2015 அன்று 2 மணிக்கு மட்/மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது ,இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி டாக்டர் க .ராஜேந்திரம் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

சிறப்பு அதிதியாக வி .மனோகரன் (அம்பாறை உதவி நில ஆணையாளர்) மற்றும்  உதவிப் கல்விப்பணிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.