இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இராமன் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாகவும் மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கெகொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் காலமானது இதுவரையில் கண்டுபிடிக்கமுடியாத நிலையிலேயே உள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று மாலை மட்டக்களப்பு,கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜையினை தொடர்ந்து கொடிச்சீலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி,பார் வீதி ஆகியவற்றின் ஊடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
மேளதாளங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் இந்த கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 14ஆம் திகதி தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபை தலைவர் தெரிவித்தார்.
இராமன் மற்றும் இராவணண் வழிபட்ட ஆலயமாகவும் மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கெகொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் காலமானது இதுவரையில் கண்டுபிடிக்கமுடியாத நிலையிலேயே உள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று மாலை மட்டக்களப்பு,கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜையினை தொடர்ந்து கொடிச்சீலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி,பார் வீதி ஆகியவற்றின் ஊடாக ஆலயத்தினை வந்தடைந்தது.
மேளதாளங்கள் முழங்க அடியார்களின் அரோகரா கோசத்துடன் இந்த கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 14ஆம் திகதி தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலனசபை தலைவர் தெரிவித்தார்.