கிழக்கிலங்கையின் தானாகதோன்றிய ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினையுடைய மட்டக்களப்பு,களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயார் ஆலயத்தின் ஆனி உத்தர தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்றது.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலயமான இந்த ஆலயம் இலங்கையில் உள்ள சுயம்பு ஆலயங்களுக்கு முற்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் பாத யாத்திரைகள் மேற்கொண்டுவந்ததுடன் பறவைக்காவடியும் எடுத்துவந்தனர்.
அலங்கார உற்சவத்தில ஆலயத்தில் சப்புறத்திருவிழா மற்றும் மாம்பழத்திருவிழா என்பன வெகுவிமர்சையாக நடைபெற்றன.
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் தீர்த்தக்கேணியருகே விசேட பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தில் பெருமளவான அடியாhகள் காவடிகளை ஆடி தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலயமான இந்த ஆலயம் இலங்கையில் உள்ள சுயம்பு ஆலயங்களுக்கு முற்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் பாத யாத்திரைகள் மேற்கொண்டுவந்ததுடன் பறவைக்காவடியும் எடுத்துவந்தனர்.
அலங்கார உற்சவத்தில ஆலயத்தில் சப்புறத்திருவிழா மற்றும் மாம்பழத்திருவிழா என்பன வெகுவிமர்சையாக நடைபெற்றன.
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் தீர்த்தக்கேணியருகே விசேட பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்த உற்சவத்தில் பெருமளவான அடியாhகள் காவடிகளை ஆடி தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.