மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றிவரும் ஆற்றல் பேரவையின் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் தாழங்குடா கல்விக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கே.பாக்கியராஜா சிறப:பு அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது ஆரையம்பதி பிரதேசத்தில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்கள் ஆற்றல் பேரவையினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் தாழங்குடா கல்விக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் கே.பாக்கியராஜா சிறப:பு அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது ஆரையம்பதி பிரதேசத்தில் பல்வேறு சாதனைகள் படைத்தவர்கள் ஆற்றல் பேரவையினால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.