கல்முனையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது அமர்வு

காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணை முதலாவது அமர்வு இன்று  கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக மண்டபத்தில் ஆரம்பமானது.


இந்த விசாரண ஆரம்ப நாளாகிய இன்று  பிரதேச செயலகத்திற்கு முன்பாக பெணகள் உட்பட ஒரு தொகையினர்  இந்த விசாரணையை பகிஸ்கரித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலரும் வாயில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு தமது கோரிக்கைகயை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளுடன் மௌனமதாக அமர்ந்து இந்த போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இன்று தொடக்கம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை கல்முனை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மண்டபங்களில் அம்பாரை மாவட்டத்திற்கான அமர்வு இடம் பெறுகின்றது.

இதனை தமிழ் மக்கள்   பகிஸகரிக்க வேண்டும் என  என உள்ளுர் சிவில் அமைப்புகளின் வேண்டுகோளுள்கும் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன.
.
உள்நாட்டு ஆணைக்குழு விசாரனைகளில் நம்பிக்கை இழந்திருப்பதால்  காணாமல் போன தமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரனை  தேவை என்ற கோரிக்கை  முன் வைக்கப்பட்ட ஏற்பாட்டாளர்களி ஆணைக்குழுவை சந்தித்து இமு தொடர்பாக மகஜரொன்றையும் கையளித்தனர்.

ஆணைக்குழுவை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு புறம் நடைபெற்றாலும்  முறைப்பாட்டாளர்களின் சாட்சியங்கள் பதிவு புதிய முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல்  உட்பட ஆணைக்குழுவின் பணிகள் வழமை போல் நடைபெற்றது.