மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையான சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழாவும் பெற்றோர் தின நிகழ்வும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவுக்கான உதவி கல்விப்பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்ப பிரிவு கற்றல் மற்றும் இணைபாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அனைவரையும் பரவசப்படுத்தியதுடன் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவுக்கான உதவி கல்விப்பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்ப பிரிவு கற்றல் மற்றும் இணைபாட விதான செயற்பாடுகளில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்கள் பரிசுகள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அனைவரையும் பரவசப்படுத்தியதுடன் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.