பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு என்ற தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இன்று பிற்பகல் 4.00மணியளவில் வாவிக்கரையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோன்பிள்ளை உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.ஷ
இதன்போது வருடாந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் வெளியிடப்படும் மகளிர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திபூங்காவரை நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் 4.00மணியளவில் வாவிக்கரையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஆ.ஜோன்பிள்ளை உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.ஷ
இதன்போது வருடாந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் வெளியிடப்படும் மகளிர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திபூங்காவரை நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான மகளிர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.