சவுக்கடியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


சுமார் 42வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கடலில் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் உள்ள பகுதிக்கு சென்றுள்ள ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.