மட்டக்களப்பு தம்பலவத்தை கணேசா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலவத்தை கணேசா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தம்பலவத்தை பொது மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாகதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் கௌரவ அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளைநாயகம், போரைதீவுப்பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் உட்படபாடசாலைஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் எனபலர் கலந்துகொண்டனர்.

இதன் போதுஅதிதிகள் வரவேற்கப்பட்டு ஆரம்பநிகழ்வுகள்; இடம்பெற்று ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரினால் விளையாட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பின்னர் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாராட்டுப் பத்திரங்களும் கிண்ணங்களும் வழங்கப்பட்டது. பாடசாலையின் இவ்வருடசாம்பியனாக பாண்டியன் இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை           குறிப்பிடத்தக்கது.