கல்வி முதுமாணி கற்கை நெறிகளுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணி கற்கை நெறிகளுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 28ஆம் திகதி  சனிக்கிழமை காலை 10.00மணிக்கு நடைபெறுமென கிழக்கு பல்கலைக்கழகத்தின் பரீட்சைகளுக்கான உதவி பதிவாளர் ப.பாஸ்கரன் தெரிவித்தார்.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் இந்த விரிவுரைகள் நடைபெறவுள்ளதாகவும் கல்வி முதுமாணி பட்டப்படிப்பிற்கான பதிவுகளை மேற்கொண்வர்களை தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது பகுதிக்கான முதுமாணி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.