பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் இது தொடர்பான செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 பொலிஸ் நிலையங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் அதிகாரிகளையும் அறிவுறுத்தும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம்,களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ரட்னாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்ட 46 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் உறுப்பினர்கள்,கிராம சேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் குற்றங்களை கட்டுப்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினை சிறந்த முறையில் கொண்டுசெல்லும் வகையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.