பனம்பொருள் கண்காட்சி இறுதி நிகழ்வு

பனை அபிவிருத்திச்சபையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடுசெய்த பனம்பொருள் கண்காட்சி இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது.


பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரட்னம் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது கண்காட்சியை பார்வையிட்டதுடன் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுவரும் வட்டியில்லா கடனையும் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் பெருந்திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.