இலங்கையின் முதலாவது ஆங்கில பாடசாலை என பெருமைபெற்றதும் இலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த பாடசாலையாகவும் உள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த மாதம் பாடசாலையின் 200வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.
இதன் கீழ் பாடசாலை தினத்தினையும் 200வது ஆண்டு நிறைவு தினத்தினையும் குறிக்கும் வகையில் பிரதான நிகழ்வு இன்று ஞாயி;ற்றுக்கிழமை காலை பாடசாலையின் முன்னாள் அதிபர்களில் ஒருவரும் மெதடிஸ்த மத்திய கல்லூரியி;ன் பொற்கால அதிபர் என்று அழைக்கப்படுபவருமான பிரின்ஸ் காசிநாதர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்கிரம பெரேரா கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ{ம்,கௌரவ அதிதிகளாக ஆளுனரின் செயலாளர் சிவநாதன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் முழுமையான ஆதரவுடன் நடத்தப்பட்டுவரும் இந்த 200வது ஆண்டு நிறைவில் பாடசாலையின் பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இதன்போது பழைய மாணவர் சங்கத்தினால் கல்வி அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு வில்லியம் ஓல்ட் கல்வி நிதியமும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் அதற்கான முதல் நிதியை கனடாவில் உள்ள பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மூன்று இலட்சம் ரூபா வழங்கப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.