திராய்மடு பிரதான வீதியில் கடந்த ஒரு வருட காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை

(லியோன்) 

கடந்த பல வருட காலமாக வாகனங்கள் பயணித்த மட்டக்களப்பு திராய்மடு பிரதான வீதி கடந்த ஒரு வருட காலமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

காரணம் குறுக்கே செல்லும் பிரதான புகையிரத கடவை செப்பனிட்டு ஒரு வருட காலம் கடந்தும், வாகனங்கள் கடந்து செல்வதற்கான வழி அமைக்கப் படவில்லை.  இப் பகுதியில் வசிக்கும் 2000 குடும்பங்களின் பிரதான வீதியாக இவ் வீதி அமைகின்றது.

கடந்த ஒரு வருட காலமாக இம் மக்கள் தமது அன்றாட அவசர தேவைகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இப் பிரதான வீதி ஊடக  நாவலடி, திராய்மடு, பாலமீன்மடு, அமிர்தகழி ஆகிய பாடசாலைகளுக்கு செல்லும் பிரதான வீதியாகவும், அரச அதிகாரிகள், கற்பிணி தாய் மார்கள், நோயாளிகள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் பயணிக்கும் பிரதான வீதியாகும், கடந்த ஒரு வருட காலமாக இப் பகுதி மக்கள் பல சிரமத்தின் மத்தியில் இவ் வீதியில் பயணித்து வருகின்றனர். 

எனவே உரிய அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து இவ் வீதியை செப்பனிட்டு  இப் பகுதி மக்கள் இலகுவாக வீதியில் பயணிக்க வழி வக்குமாறு இம் மக்கள் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுகின்றனர்.