கள்ளியங்காடு மயானத்தில் மதுபானம் விற்றவர்கள் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போயா தினமான இன்று சட்ட விரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கள்ளியங்காடு பொதுமயானப்பகுதியிலேயே இந்த சட்ட விரோத மதுபான விற்பனைகள் இடம்பெற்றதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குpடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைதுசெய்துள்ளடன் அப்பகுதியில் இருந்து மதுபான போத்தல்கள் 10 மற்றும் பியர் போத்தல்கள் 10யும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்;களையும் கைப்பற்றப்பட்ட மதுபானங்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.