மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்றுவருகையில் அங்கு பாதுகாப்பு பணியில் பெருமளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்போது கஞ்சா வைத்திருந்த திருகோணமலையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரை கைதுசெய்துள்ளன.அவரிடம் இருந்து 390 மில்லிக்கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இரவு வேளை பூசைகளில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டுவருகையில் மதுபோதையில் அதிகளவானோர் நடுமாடுவதால் ஆலயம் வருவோர் மிகுந்த அளெகரியங்களுக்குள்ளாவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்துக்குள் மதுபோதையில் நடமாடுவோரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மதுபோதையில் இளைஞர் குழாம்கள் இரவுவேளைகளில் பெரும் அசௌகரியங்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்திவருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆலய வளாகத்துக்குள் விசேட தினங்களில் மதுபோதையில் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலய வளாகத்துக்குள் அடியார்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக கொள்ளைச்சம்பவங்கள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.