கடந்த மாதம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில பின் ஆசனத்திலிருந்து பயணிக்கும் பெண்கள் இரண்டு பக்கமும் கால்களை வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் திடீரென கொண்டு வரப்பட்டது.
இதனால தமிழ் கலாசார உடையுடன் பயணிக்கும் பெண்களும் முஸ்லிம் பெண்களும் பலத்த அசௌகரியங்களை எதிர் கொண்டிருந்தனர்.
இன்றுமுதல் இந்த புதிய சடடம் தளர்த்தப்பட்டுள்தாகவும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கம் பெண்கள் வழக்கம்போல் ஒருபக்கம் கால்களை வைத்துக்கொண்டு பயணிக்கலாம் எனவும் இது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் நாளை காத்தான்குடியில் இடமபெறவுள்தாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபரிடம் இந்தச் சட்டத்தினை தளர்த்துமாறும் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)