எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் தமிழியல் விருது 2012 : முடிவுகள்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இந்த வகையில், 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெறுபவர்களின் பெயர் விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.


உயர் தமிழியல் விருது

எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது பெறும் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளியாக • பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் கௌரவிக்கப்படுகிறார்.

தமிழியல் விருது

தலா ரூபா 15,000 பணத்துடன் வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநாயகி தமிழியல் விருது பெறும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த 14 மூத்த படைப்பாளிகளாக என்.கே.ரகுநாதன், சா.வே.பஞ்சாச்சரம், தெணியான், கே.ஆர்.டேவிட், ஜூனைதா ஷெரீப், சாரல் நாடன், மூ.பொன்னம்பலம், ச.அருளானந்தம், சு.ஸ்ரீகந்தராஜா, எஸ்.தில்லைநடராஜா, செ.குணரெத்தினம், தாமரைச்செல்வி, ஆ.மு.சி.வேலழகன், எஸ்.முத்துக்குமாரன் ஆகியோர் கௌரவிக்கப்படுகின்றனர்.

தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது

ரூபா 25,000 பணத்துடன் கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருது பெறும் அயல்நாட்டுப் படைப்பாளியாக தமிழ்நாடு, இராமநாதபுர மாவட்டம், தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்  வரலாற்று ஆய்வாளர் வைகிங் மு.ச. கருணாநிதி கௌரவிக்கப்படுகிறார்.

இனநல்லுறவு தமிழியல் விருது

ரூபா 10,000 பணத்துடன் வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது பெறும் இன நல்லுறவுக்காக உழைத்த சிங்களமொழிப் படைப்பாளி • சுனந்த தேசப்பிரிய கௌரவிக்கப்படுகிறார்.

ஓவியருக்கான தமிழியல் விருது

ரூபா 10,000 பணத்துடன் ஓவியர் கிக்கோ தமிழியல் விருது பெறும் சிறந்த ஓவியர் ஆசை இராசையா கௌரவிக்கப்படுகிறார்.

சிறந்த நூலுக்கான தமிழியல் விருது

2011 யில் வெளிவந்த தமிழியல் விருது பெறும் சிறந்த 10 நூல்களுக்கு வழங்கப்படுகிறது.

• சிறுகதை 

ரூபா 10,000 பணத்துடன் துறையூர் வே.நாகேந்திரன் தமிழியல் விருது அகில் எழுதிய கூடுகள் சிதைந்தபோது...,

• நாவல்

ரூபா 10,000 பணத்துடன் துறையூர் நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருது அகளங்கன் எழுதிய அலைக்குமிழ்

• கவிதை

ரூபா 10,000 பணத்துடன் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழியல் விருது
கவிஞர் குறிஞ்சிவாணன் எழுதிய துயரம் சுமக்கும் தோழர்களாய்

• சிறுவர் இலக்கியம்

ரூபா 10,000 பணத்துடன் தகவம் வ.இராசையா தமிழியல் விருது
மாவை நித்தியானந்தன் எழுதிய சட்டியும் குட்டியும்

• நாடகம்

ரூபா 10,000 பணத்துடன் கலைஞர் அழ.அழகரெத்தினம் தமிழியல் விருது
க.இ.கமலநாதன் எழுதிய ஆச்சி... அச்சாப்பாட்டி

• ஆவணமாக்கல்

ரூபா 10,000 பணத்துடன் கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை தமிழியல் விருது
என்.செல்வராஜா எழுதிய நூல்த் தேட்டம்

• சமயம்

ரூபா 10,000 பணத்துடன் அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவேல் தமிழியல் விருது முகில்வண்ணன் எழுதிய பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம்

• கட்டுரை

ரூபா 10,000 பணத்துடன் செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீPகந்தராஜா தமிழியல் விருது
அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஓர் அறிமுகம்

• வரலாறு

ரூபா 10,000 பணத்துடன் வித்தியாகீர்த்தி ந.சந்திரகுமார் தமிழியல் விருது
எம்.சி.எம்.ஷெரீப் எழுதிய சுவடுகள்

• ஆய்வு

ரூபா 10,000 பணத்துடன் பதிவாளர்நாயகம் எஸ்.முத்துக்குமாரன் தமிழியல் விருது வாகரைவாணன் எழுதிய கிழக்கிலங்கைத் தமிழகம் ஆகிய நூல்கள் விருது பெறுகின்றன.

இவ்விருதுகள் 2013 ஒக்டோபர் மாதம் நடைபெறும் தமிழியல் விருதுவழங்கும் நிகழ்வின்போது விருது வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.