3,000 இளைஞர்களுக்கு NVQ-3 குறுகிய கால பாடநெறி!!


தொழில்மயமான தொழிற்பயிற்சி முறையின் கீழ் NVQ-3 குறுகிய கால பாடநெறிகளுக்கு 3,000 தொழிற்பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒரு விசேடதிட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தேசிய தொழிற்பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணையத்தால் (NAITA) முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேலையற்ற இளைஞர், யுவதிகளை பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நோக்கி அவர்களை வழிநடத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கள உதவியாளர் (விவசாயம்), பராமரிப்புப் பணியாளர், அலுமினியம் பேப்ரிகேட்டர், கார் சர்வீஸ் மற்றும் இன்டீரியர் கிளீனர், பிளம்பர், எலக்ட்ரீசியன் (உள்நாட்டு), வெல்டர், சோலார் ஹீட்டர் நிறுவுபவர், மொபைல் போன் பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் கெண்டின் பணியாளர் ஆகியோர் இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லது தனியார் துறை நிறுவனத்தில்/தொழில்துறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, NVQ சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயணச் செலவுகள், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தலைமைப் பயிற்சி மற்றும் தொழில்/உண்மையான பணியிடச் சூழல்களில் பயிற்சி போன்ற பலன்களையும் பெறுகின்றனர்.